Share

Tuesday, 19 February 2013

கேள்வியுலகம்

இவ்வுலகில் வாழ்கீறீர்களா? அதுவும் இந்தியாவிலா?
கண்டிப்பாக பல கேள்விகள் உங்களை சூழ்ந்திருக்கும் அல்லவா? சிலவற்றை பார்போமா?
நீங்கள் பிறந்தவுடன் உங்கள் பெற்றோரிடம், என்ன குழந்தை? சந்தோஷம்தானா ? குழந்தைக்காக வேண்டிக்கிட்டதை நிறைவேத்திட்டியா?
எப்ப மொட்டை? ஸ்கூலில் சேர்த்தாச்சா ? எப்படி படிக்கிறான்?
இத்தனை கேள்விகளும் நீங்கள் மழலையில் திளைத்துக்கொண்டு இருக்கும்போதே உங்கள் பெற்றோரை துளைக்கின்றன அல்லவா? 
மேலும் சிலவற்றை பார்ப்போமா ? பையன் என்ன மார்க்கு வாங்குறான் ? டெந்த்க்கு அப்புறம் என்ன குருப் ? ப்ளஸ் 2 கோச்சிங் எங்க சேர்த்திங்க?
என்ன காலேஜ் ? படிப்ப முடிச்சுட்டானா?

ஸ்ஸ்ஸ்....கண்ண கட்டுதே. சரி , இந்த கட்டம்தான் நமக்கு கொஞ்சம் ரிஸ்கியானது. இதுவரைக்கும் கேட்ட கேள்விக்கெல்லாம், உங்கள் பெற்றோரிடம் கேட்கப்பட்டவை
இனிமேல் உங்க்ளிடம் கேள்விகள் தொடரும். என்ன தம்பி வேலைக்குப் போல? நீ நல்லா படிப்பியே ? இன்னுமா வேலைக்குப் போல? ஏன் நீ இத ட்ரை பண்ணக்கூடாது?
எல்லாருக்கும் ஏதோ ஒரு பொய்ய சொல்லி சமாளிச்சிட்டு, கஷ்டப்பட்டு ஒரு வேலைய தேடிப்போம்.

இப்படி கேள்விகள் தொடரும் உலகத்துல நாம ஜெயிச்சு வந்தப்பறம் அடுத்த கேள்வி சுழற்சி நம்மை சுத்தும். என்னப்பா கல்யாண்ம் ஆயிடுச்சா?
எப்ப குழ்ந்தை? இதுதான் வாழ்க்கை.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகி

அழகி
தமிழில் தட்டச்சு செய்ய