வாங்க வாங்க லொள்ளு பவனுக்கு.நல்லா இருக்கீங்கீங்களா. ஒரு காபி சாப்பிடறீங்களா.
பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி எல்லாம் சௌக்கியமா.இந்த புள்ளக்குட்டி பத்தி பேசுனா சிலருக்கு குளிர் ஜீரம் வந்துடும்.ஏன்னா, அதுகள பேனி பாதுகாக்கறது எம்புட்டு சிரமம்.என் ந்ண்பர் ஒருத்தர் ஆபீஸுக்கு ஸ்கெட்ச் பென்னு, ஜியாமெட்ரி பாக்ஸெல்லாம் கொண்டு வந்திருந்தார், கேட்டா புள்ளைக்கு ப்ராஜெக்ட் வொர்க் செய்யுறாராம்.சரின்னு ஆபீஸ் முடிஞ்சு பஸ் ஏறலாம்னு பார்த்தா, காலேஜ் பசங்க கூட்ட அலையில சமாளிச்சு ஏற வேண்டியதா போச்சு.என்ன ஆபீஸ்ல வேலைப் பாக்குறேன், பஸ்சுல போறேன்னு பாக்கறீங்களா? என்ன செய்ய ஒரே Inflation, இந்த பெட்ரோல், டீசல் விலைய நிர்ணயிக்குற அமைதி முனிவர்,என்னைக்காவது
பஸ்சுல footboard- அடிச்சுருப்பாரா?.
சரி நமக்கு பிடிச்ச ஆரிய பவன்-ல காபி சாப்பிடலாம்னு போனா, எனக்கு சர்க்கரையில்லா காபி தர்றாரு காபி மாஸ்டர் கண்ணன். "உங்களுக்கு சர்ககரை வரக்கூடாதுல்ல சார்", " ஏம்பா! உனக்கு இந்த அக்கறை, வீட்ல
அவ வெக்கிற வடிச்ச தண்ணிக்கும், காபிக்கும் வித்தியாசம் தெரியாமத்தானே உன் கிட்ட வர்றேன்.உன் அன்புக்கு அளவேயில்லையா?.ஆரிய பவனில் எப்போதும் இப்படித்தான், அவர்கள் ஆப்பத்தோடு அன்பையும் பரிமாறுவார்கள்.தயிர்வடை கொடுக்கும் சப்ளையர்கள் தன்னடக்கத்தோடு இருப்பார்கள்.அன்றாட பணிச்சுமையில் இருந்து எனக்கு இதமான விடுதலை அளிப்பவர்கள் மேல் நான் வைத்துள்ள அன்பு, என் வலைப்பூவின் பெயரிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
என் லொள்ளு பவனில் நான் கடந்து வரும் மனிதர்கள்,சினிமா,என் சிந்தனைகள்,சில சுவையான கிறுக்கல்கள் போன்றவற்றை
போகிறேன்.ஆரிய பவன் எனக்கு இதமளிப்பதைப்போல் என் லொள்ளு பவனும் உங்களை குதூகளிக்கும் என நம்புகிறேன். இந்த தளத்தை அமைத்துக் கொடுத்த Blogger-க்கு நன்றி.உங்கள் வருகைக்கு நன்றி.சுவைமிகு பதிவுகளை படித்து மகிழ்க. மீண்டும், மீண்டும் வருக.


