Share

Saturday, 23 February 2013

உன்னை காணாது நான்-இவ்வாண்டின் மிகச் சிறந்த பாடல்

  இசை என்னும் அற்புத வடிவத்தில் அபரிமிதமான
உழைப்பும், கலைஞர்களின் ஒருங்கிணைப்பும் இணைந்தால் எத்தகைய சிறப்பான கலைப்படைப்பு உருவாகும் என்பதற்கு விஸ்வருபம் திரைப்படைத்தின் இப்பாடலே சான்று.கமல்ஹாசன் எத்தனை பெரிய கலைஞர், இந்த பாடல் உருவான விதம் குறித்த
வீடியோவில் அவர் எவ்வளவு எளிமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.தன் சக கலைஞர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் கருத்துக்களை அக்கறையுடன் கேட்டு, திரைப்பட
இயக்குவிப்பவர் ஆக இல்லாமல் ஒன்றிணைந்து இயங்குபராக மிளிர்கிறார்.

 அவரது முகத்தைப் பாருங்கள், ஏதோ புதிதாக கற்றுக் கொள்ளும் அறிமுக நடிகன் போல் உள்ளார்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையை ஆண்டவன் கொடுத்துள்ளான், யாரும் யாருக்கும்
குறைந்தவர்கள் அல்ல, இந்த உண்மையை பரிபூரணமாக உணர்ந்தவர் உலகநாயகன்.என்ன, ஆண்டவன் திறமையை வழங்கினான் என்பதை விட
பெற்றோர் வழங்கினர் என்று சொன்னால் அவருக்கு உச்சிதமாய் இருக்கும்.





Related Posts Plugin for WordPress, Blogger...

அழகி

அழகி
தமிழில் தட்டச்சு செய்ய