Share

Thursday, 21 February 2013

நான் ஈ- அசகாய சாகசம் செய்யும் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

மனிதனால் சாகசம் செய்ய முடியும் "ஈ"யால் முடியுமா, முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. ஒரு குழந்தைக்கு கதை சொல்வது போல் தொட்ங்கும் கதையில் நம்மையும் குழந்தையாக்கி குதூகலபடுத்துகிறார் இயக்குனர். காதல் ஜோடிகள் இணையும் தருவாயில் காதலைக் கெடுத்த வில்லனை ஹீரோ மறுஜென்மம் எடுத்து பழிவாங்குவதுதான் படத்தின் ஒன்லைன். நேர்த்தியான திரைக்கதை, அசத்தும் visual effects ஆகியவை கதை பழயது என்பதை மறக்கச் செய்கின்ற்ன.




படத்தின் மிகப்பெரிய பலம் " கிச்சா சுதீப் ". கன்னட திரைப்படவுலகில் தொடர்ந்து மூன்று முறை Filmfare வென்றவர், இயக்குந்ர், கிரிக்கெட் வீரர் என பன்முகம் கொண்டவர்.சமந்தா மீது காதலில் உருகுவது, 'நான் ஈ'க்கு பயப்படுவது, மிரட்சியில் உறைந்து நகைச்சுவையும் அளிப்பது என பல காட்சிகளில் பக்காவக பரிமளிக்கிறார்.


                       சமந்தா நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நானிக்கு இது நிறைவான படம்.சின்ன இடைவெளியில் தோன்றினாலும் சந்தானம் அசத்தியிருக்கிறார்.
கிரேசி மோகனின் வசனங்கள் படத்துக்கு பலம்.


'ஈ'யின் பாவனைகளை புரிந்துகொள்பவள், 'ஈ'க்கு பாதுகாப்பு மூகமூடி செய்விப்பவள் என்ற காரணங்களுக்காக கதாநாயகியை மாற்றுதிறனாளி குழ்ந்தைகளை பேணுபவள், மற்றும் Miniature artist என்று லாஜிக் சேர்த்து லயிக்கவைக்கிறார் இயக்குநர்.படப்பிடிப்பின் போது இல்லாத 'ஈ'யை இருப்பதாக நினைத்துக் கொண்டு காட்சிப்படுத்துவது எவ்வளவு சிரமம்?. ஆனால், பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்துவிட்டது.









நானி மீண்டும் மனித உருவம் பெற மாட்டாறா என ஏங்க வைக்கிறார் இயக்குனர்.எனினும், பூர்வஜென்மத்தை விளக்கும் அகோரமான சாமியார், நம்பிக்கையானவனை கொல்லும் போன்றவைத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

தியேட்டரை விட்டு வெளியேவரும் போது "ஏய்! ரொம்ப funnyயா இருந்துச்சுல்ல " போன்ற word-of-mouth publicityயே போதும் "ஈ"யை இன்டர்நேஷ்னல் லெவலுக்கு எடுத்துச்
செல்லும்.


     




Related Posts Plugin for WordPress, Blogger...

அழகி

அழகி
தமிழில் தட்டச்சு செய்ய