நல்ல நேரம் பார்த்து
ராகு காலம் எம கண்டம் பார்த்து
அஷ்டமி, நவமி பார்த்து
என் தயக்கத்தை உடைத்து
என் காதலைச் சொல்ல
உன்னிடம் வந்தால்
உன் சுபமூகூர்த்த கல்யாண பத்திரிக்கையை
என் கைகளில் தவழச் செய்து
மறக்காம வந்துடு தம்பி
என்றாயே, ச்சே......
என்னுள் தோன்றிய காதல் கரு
சிதைவுற்றிருந்தாலே சந்தோஷப்பட்டிருப்பேன்
இப்படி பிறந்துவிட்டு
பேந்த பேந்த விழிக்கின்றதே